Wednesday, August 20, 2014

சிறுகதை: பெரியாத்தா

வீட்டு வாசலிலேயே பெரியாத்தா உட்கார்ந்திருப்பார். வீட்டுக்கு வருபவர்களின் கண்களில் சட்டென பட வேண்டும் என்பதுதான் அவளுடைய திட்டம். தங்கையின் வீட்டில் வந்து உட்கார்ந்து 5 வருடங்கள் ஓடிவிட்டன பெரியாத்தாவிற்கு.

தோள் துண்டை குறுக்காக மாட்டிக் கொண்டு பவுடர் பூசிக் கொள்வாள். வீட்டுக்கு வெளியில் போகவும் அனுமதியில்லை.

வாங்க தம்பி! உட்காருங்க

நான் பெரியாத்தா. என் தங்கச்சி வீடுதான் இது. குளிச்சிக்கிட்டு இருக்கா? இதோ வந்துருவா. உட்காருங்க

நான் பெரியாத்தா. அப்படித்தான் கூப்டுவாங்க முன்னலாம். நானும் நல்லாத்தான் இருப்பேன். அழகா எலும்பா... என் புருஷன் பத்து வருசத்துக்கு முன்னாடியே செத்துட்டாருயா

எப்படி செத்தாருனுத்தானே நினைக்கற?”

எல்லாம் குடிதான். நல்லா சீன சாராயம் குடிச்சாரு. பச்சையா குடிப்பாரு. திடீர்னு செத்துத் தொலைஞ்சிட்டாரு