Thursday, August 16, 2012

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு- ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி - என்.கே.ரகுநாதன்




என்.கே.ரகுநாதன் அவர்கள் ஈழ இலக்கிய வெளியில் ஒரு நாவலாசிரியராக அறியப்பட்டவர். ‘தீண்டத்தாகதவன்’ எனும் ஈழச் சிறுகதை தொகுப்பில் அவருடைய ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ எனும் முக்கியமான நாவலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி பிரசுரமாகியுள்ளது. அப்பகுதி ஒரு சிறுகதைக்கான தன்மையைப் பெற்றுள்ளதால் அந்தத் தொகுப்பில் இடம்பெறச் செய்துள்ளார்கள்.

ரெஜிஸ்த்தார் எனும் அதிகார வர்க்கம்

மலேசியச் சூழலில் முன்பெல்லாம் குழந்தை பிறந்தவுடன் காவல் நிலையத்தில்தான் பதிவார்கள். பெரும்பாலான பெயர்கள் எழுத்துப்பிழைகளுடன் பதியப்படுவது வழக்கமாகும். சுப்ரமணியம் எனக்