Wednesday, February 29, 2012

"சினிமா எனும் கலையைக் கொன்றவர்கள்" - கே.பாலமுருகன்



கேள்வி : சினிமா மீதான ஆர்வம் எப்படி வந்தது?

பதில் : நான் சிறுவயது முதல் சினிமா பார்த்துப் பழகியவன். வீட்டில் தனிமையில் இருந்த பெரும்பாலான காலங்களில் சினிமா மட்டுமே பார்த்து என் பொழுதுகளை நிரப்பியிருக்கிறேன். வெறும் பழக்கமாக இருந்த சினிமா என் வாழ்க்கையின் முக்கியமான பகுதியாகியிருந்தது. எல்லோருக்கும் அது பொழுதுபோக்காக இருக்கையில் எனக்கு மிக உயர்ந்த ஒரு கலை வடிவமாகத் தெரிய ஆரம்பித்தது. (இப்படிச் சொல்வதே கொஞ்சம் வருத்தமாகவும் நகைப்பாகவும் இருக்கிறது) சினிமா என்பதே கலைத்தானே? சமூகம் மறந்துவிட்ட ஒன்றை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய கட்டாயம்.

கேள்வி : சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாகக் கருதப்பட என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

பதில் : சினிமாவின் தேவை என்ன என்பதைத்தான் ‘தீர்ந்து போகாத வெண்கட்டிகள்’ எனும் என்னுடைய சினிமா நூலில் விரிவாக உரையாடியுள்ளேன். கட்டாயம் இந்த நூலைப் படித்து முடிப்பவர்களுக்கு சினிமா என்பது எத்தனை ஆழமான கலை வடிவம் என்பதை உணர முடியும்.