Wednesday, February 29, 2012

"சினிமா எனும் கலையைக் கொன்றவர்கள்" - கே.பாலமுருகன்



கேள்வி : சினிமா மீதான ஆர்வம் எப்படி வந்தது?

பதில் : நான் சிறுவயது முதல் சினிமா பார்த்துப் பழகியவன். வீட்டில் தனிமையில் இருந்த பெரும்பாலான காலங்களில் சினிமா மட்டுமே பார்த்து என் பொழுதுகளை நிரப்பியிருக்கிறேன். வெறும் பழக்கமாக இருந்த சினிமா என் வாழ்க்கையின் முக்கியமான பகுதியாகியிருந்தது. எல்லோருக்கும் அது பொழுதுபோக்காக இருக்கையில் எனக்கு மிக உயர்ந்த ஒரு கலை வடிவமாகத் தெரிய ஆரம்பித்தது. (இப்படிச் சொல்வதே கொஞ்சம் வருத்தமாகவும் நகைப்பாகவும் இருக்கிறது) சினிமா என்பதே கலைத்தானே? சமூகம் மறந்துவிட்ட ஒன்றை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய கட்டாயம்.

கேள்வி : சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாகக் கருதப்பட என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

பதில் : சினிமாவின் தேவை என்ன என்பதைத்தான் ‘தீர்ந்து போகாத வெண்கட்டிகள்’ எனும் என்னுடைய சினிமா நூலில் விரிவாக உரையாடியுள்ளேன். கட்டாயம் இந்த நூலைப் படித்து முடிப்பவர்களுக்கு சினிமா என்பது எத்தனை ஆழமான கலை வடிவம் என்பதை உணர முடியும்.

Friday, February 17, 2012

மெரினா திரைப்படம் - கொஞ்சமாகப் பிழைத்துக்கொண்ட கலை


மெரினா கடற்கரை – பசிக்கிறது எனும் ஓர் ஆதி செயலை எதிர்க்கொள்ள எத்தனை வகையான போராட்டம், வாழ்தல், தப்பித்தல், சுரண்டல், புறக்கணிப்பு நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. உலகத்தின் ஒரு பகுதியா மெரினா எனும் பகுதியில் நடந்து முடிந்த பல்லாயிரம் கணக்கான வாழ்வின் மீதத்தைப் பற்றிய கதை.

வழக்கம் போல பாண்டிராஜ் படத்தில் வரும் கதையின் மையத்தைவிட்டு நகரும் கிளைக்கதைகள் இப்படத்திலும் வந்து போகின்றன. காதல் இப்படத்தில் கேலி செய்யப்பட்டுள்ளது, விமர்சிக்கப்பட்டுள்ளது. மெரினாவிற்கும் காதலுக்கும் நீண்ட நெடிய தொடர்பு இருப்பதைச் சித்திரமாக வரைந்து வைத்திருக்கிறது மெரினா வாழ்வு. காதலர்கள் வாங்கி உண்பதற்காகச் சுண்டல் விற்கப்படுகிறது. அந்தச் சுண்டல்களை விற்று ஏதோ கொஞ்சமாக

Thursday, February 16, 2012

தமிழ் எழுத்துகள் அறிமுக வாரம் 2012

எழுத்துகளை நேசிக்க வைப்பதன் மூலம் அவனுடைய மொழியைக் காப்பாற்ற முடிகிறது


மாணவர்களுடன் இன்றுதான் இந்த எழுத்துகளைத் தரிசிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது

Thursday, February 9, 2012

கலை இலக்கிய விழா 4 – நூல் வெளியீடு


5ஆம் திகதி கோலாலம்பூரில் வல்லினம் ஏற்பாட்டில் 4ஆவது கலை இலக்கிய விழா 4 நூல்களின் வெளியீட்டுடன் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. வல்லினம் ஆசிரியர் ம.நவீன், யோகி, சிவா பெரியண்ணன் மேலும் பல நண்பர்களின் ஒத்துழைப்புடன் விழாவை முன்னெடுக்க முடிந்தது. 2மணியைப் போல விழா ம.நவீனின் வரவேற்புரையுடன் தொடங்கியது. வல்லினம் பதிப்பகத்திற்கும் மற்ற பதிப்பகத்திற்குமான வித்தியாசத்தை முன்வைத்து, மற்ற மலேசிய எழுத்தாளர்கள் அதிகாரத்தின் முன் கூனி குறுகி நின்று புத்தகம் போடும் அவலத்தை அழுத்தமாகச் சொன்னார். புத்தகம் எழுதும் எழுத்தாளர்களுக்கு ரோயல்டி வழங்குவதைப் பற்றியும் அவர் குறிப்பிட்டுப் பேசினார். அரசியல்வாதிகளை நம்பி புத்தகம் போடும் எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழாவை எப்படி அரசியல்வாதிகள் தங்களின் பிரச்சார மேடையாகப் பாவித்துக்கொள்கிறார்கள் என்றும் எடுத்துரைத்தார்.

Tuesday, February 7, 2012

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு... 2 - ஆற்றல் மிகு கரத்தில் – கே. டானியல்



அறிமுகம்: யாழ்ப்பாணத்தில் 1927-இல் பிறந்தவர் டானியல். இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டு 11 மாதங்கள் சிறைப்பட்டார். தமிழகத்திற்கு வந்து தஞ்சையில் தங்கினார். இலங்கையில் தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கத்தின் அமைப்பாளராகவும், மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராகவும் இருந்தவர். தஞ்சையில் மார்ச்சு 1986-இல் மரணமடைந்தார். ஈழத்து பஞ்சமர் மக்களுக்காகத் தோழர் டானியல் தன் இலக்கிய இயக்கப் பணிகளை அர்ப்பணித்தவர். தமிழ் இலக்கியத் துறைக்கு நாவல், குறுநாவல், சிறுகதை என பல வடிவங்களில் தம் பங்களிப்பைச் செய்துள்ளார்.

Wednesday, February 1, 2012

போராளி : மனநோய் சித்திரம்

“இந்தச் சமூகத்தில் ஆளுமைகளுக்கு இரண்டு வகையான தண்டனைகள் மட்டுமே தரப்படுகின்றன. ஒன்று அரசியலுக்கு அவர்களை அடிமையாக்கி அவர்களின் அறிவை அடகு வைப்பது அல்லது அதிகம் படித்தப் பைத்தியம் என மனநோயாளியாகச் சித்தரிப்பது”

மனநோய் என்பது எப்படிப்பட்டது? அதன் உக்கிரம் என்ன? அதை இந்தச் சமூகம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எப்படிக் கையாண்டு வருகிறது? மனநோய் பற்றிய விசயங்களைச் சினிமாவும் மற்ற கலை வடிவங்களும் எப்படிப் பதிவு செய்திருக்கின்றன? என்ற கேள்விகளுடன் இப்படத்தை அணுக வேண்டியுள்ளது. இதன் மூலமே போராளி படத்தின் முக்கியத்துவம் பலவீனம் என உரையாடலை நீடிக்க வாய்ப்பாக இருக்கும்.

சமீபக் காலமாக சமுத்திரக்கனி - சசிக்குமார் கூட்டணி தமிழ் சினிமா சூழலில் உருவாகி நிலைக்கொள்கின்றன. சசிகுமார் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பதும், சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பதும் என அந்தப் பாரம்பரியம் தொடர்கிறது. இருவருமே அந்தந்தப் படங்களில் கச்சிதமாகப் பொருந்துவதால் அதை ஒரு முரணாகவும் பார்க்க முடியவில்லை. தமிழ் சினிமா சூழலில்