Tuesday, November 8, 2011

கவிதை: ஒரு சொல்லைக் கொன்றவுடன் அடக்கம் செய்யவும்

ஒரு சொல் ஊனமானதுடன்
தன் மீதான அனைத்து குரல்களையும் கொன்றுவிடுகிறது.
ஒரு சொல்லை எப்படி ஊனமாக்கலாம்?
பெரும் வாக்கியத்துக்குள் அர்த்தமற்று நுழைக்கலாம்
தனி வாக்கியத்தில் பிழையான பொருளுடன் உள்நுழைக்கலாம்
குறிலை நெடிலாக்கி நெடிலைக் குறிலாக்கி துணைக்காலைப் பிடுங்கியெடுத்து
சொல்லுக்குள்ளிருக்கும் எழுத்தை எப்படிவேண்டுமென்றாலும் மாற்றிச் சிதைக்கலாம்.
ஊனமான ஒரு சொல்லைப் பிறகெப்படிக் கொல்வது?