Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு – முதல் பார்வை


படம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்கவிருந்த அனுபவத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. ஆகையால் இதை ஒரு சினிமா பார்வையாக மட்டும் மேலோட்டமாக எழுதலாம் என முடிவெடுத்துள்ளேன். காலத்தின் தேவைக்கருதி செயல்படுவதன் மூலம் சில சமயங்களில் சொற்பமாகப் பேசிச் செல்வதே நடைமுறைக்கு ஏற்புடையது.

‘வாகைச் சூட வா’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு சமர்ப்பண வகை சினிமாவைப் பார்த்தேன். ஆகையால் இனி ‘சமர்ப்பண’ வகை சினிமாக்கள்