Friday, September 30, 2011

வரலாறும் புகைப்படமும் – 3

மலேசியாவுக்கு வந்து சேர்ந்த புகைப்படக்காரர்கள் பல மாதங்கள் இங்கு இருந்து தங்களின் புகைப்பட ஆய்வையும் வரலாற்றையும் பதிவு செய்தார்கள். குறிப்பாக தோம்சன் எனும் புகைப்படக்காரர் பினாங்கு மாநிலத்தில் 10 மாதங்கள் தங்கி அந்த மாநிலத்தையும் மனிதர்களையும் புகைப்படம் எடுத்துச் சேகரித்தார்.

பிஷோப் சாலையும் அங்கு வாணிபம் செய்து கொண்டிருக்கும் சீனர்களும். யாரோ ஒரு முக்கியமான நபரின் வருகைக்காக பினாங்கு சாலைகள் விஷேசமான வரவேற்பை மேற்கொண்டிருப்பதைப் போல இருக்கிறது. பினாங்கு மாநிலம் 18 ஆம் நூற்றாண்டில் நான்கு பிரிவாக அமைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது. அதாவது Light, Beach, Chuliah and Pitt streets. இன்று “பாடாங் கோத்தா, gurney street” என அழைக்கப்படும் இடங்கள் யாவும் Beach பகுதியைச் சேர்ந்தவை. பினாங்கின் இந்தியர் பகுதி முன்பு Light பகுதியைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகிறது.

வரலாறும் புகைப்படமும் – 2


நிறைய பேரணிகள் நடந்த நாடு இது. 

தொடக்கக் காலத்திலேயே சுதந்திரத்திற்காகவும் எதிர்ப்புணர்வுகளைத் தெரிவிப்பதற்காகவும் நாட்டில் அமைதி பேரணி கையாளப்பட்டே வந்துள்ளது. அதில் முக்கியமானதாக கம்னியுஸ்ட் இயக்கத்திற்கு எதிராக 1950-இல் செமென்யேவில் நடத்தப்பட்டப் பேரணியாகும். 100க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்தினர்.


துங்கு அப்துல் ரஹ்மான் நினைவகம்

சமீபத்தில் கோலாலம்பூரில் அமைந்திருக்கும் துங்கு அப்துல் ரஹ்மான் நினைவகத்திற்குச் சென்றிருந்தேன். வரலாற்று தொடர்பான சில தகவல்களைத் திரட்ட முடிந்தது. அங்கே ஒரே தமிழ் அதிகாரியாகப் பணியாற்றும் சென்பகவள்ளி அவர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது. துன் சம்பந்தன் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதிலும் மலேசிய வரலாற்றில் தமிழ் மக்களின் பகுதிகளை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற தேடலிலும் உள்ளவர்.