Sunday, September 25, 2011

திரை விமர்சனம்: எங்கேயும் எப்பொழுதும்


பேருந்து பயணம்

இரு பேருந்துகள் எதிரெதிரே மோதிக்கொள்கின்றன. ஏராளனமானவர்கள் இறந்து போகிறார்கள். கவனக்குறைவும் அதிவேகமும் விபத்தையும் மரணத்தையும் இழப்பையும் கொண்டு வருவதை மிகக் கச்சிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். கதைக்குள் எந்த நெருடலும் இல்லாமல் பொருந்தி வரும் கதைப்பாத்திரங்கள் மிகையில்லாமல் வந்து போகிறார்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய படம். திருச்சியிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சிக்கும் போகும் பேருந்துகள் விழுபுரத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் காட்சி சாலையில் வாகனத்தைக் கவனக்குறைவாக ஓட்டுபவர்களுக்கான எச்சரிக்கை. நம்மைச் சுற்றி உள்ளவர்கள், நம் அன்பிற்குரியவர்கள் நாம் கார் ஓட்டும்போது நடுக்கத்துடனும் பயத்துடனும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அரை மனமாய் இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?