Saturday, May 14, 2011

செம்பருத்தி இரு மாத இதழ்-மாற்றம்

மலேசிய அரசியலின் விரிவான அலசலையும் பல நல்ல கட்டுரைகளையும் பிரசுரித்துக்கொண்டிருந்த செம்பருத்தி இதழ் பெரிதும் மாற்றம் கண்டு இப்பொழுது பல வண்ணப் பக்கங்களுடம் விற்பனையில் இருக்கின்றது.

மலேசியாவின் மிக முக்கியமான சிறுகதையாளரும் இளைஞருமான சு.யுவராஜன் செம்பருத்தி இதழின் ஆசிரியராகப் புதியதாகச் சேர்ந்துள்ளார். மேலும், பசுபதி, மா.சண்முகசிவா, ம.நவீன், கே.பாலமுருகன்(நான்) இன்னும் சில இளையோர் கூட்டம் செம்பருத்தியின் ஆலோசகர்களாக அவர்களுடன் கைக்கோர்த்துள்ளோம்.