Thursday, March 31, 2011

அம்பு விடுதலும் வில் வித்தையும்- அன்பரசி சுப்ரமணியம் மலேசிய ஆளுமை


(Legend of archery-Ms.Anbarasi Subramaniam)

கடந்த 4 நாட்கள் அம்பு விடுதல் விளையாட்டிற்கான பயிற்றுனர் பயிற்சி பட்டறைக்குச் சென்றிருந்தேன்(archery coaching training). இந்த விளையாட்டைப் பற்றி தெரிந்துகொண்டு நம் இந்திய மாணவர்களைப் பயிற்றுவிக்கலாம் எனும் எண்ணம் உருவாகியபோதே இதுவரை அறிந்திராத இந்த விளையாட்டின் மீது விருப்பமும் ஆர்வமும் கூடியிருந்தது. பெரும்பாலும் இந்தியர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வம் இருப்பதில்லை அல்லது ஓட்டப்பந்தயமும் காற்பந்தையும் தவிர வெவ்வேறு விளையாட்டுகளில் இந்திய இளைஞர்கள் பங்கெடுப்பதில்லை எனவும் ஒரு பரவலான விமர்சனம் உண்டு. குறிப்பாக விளையாட்டுத் துறையில் இந்தியப் பெண்களின் அடைவும் பங்களிப்பும் என்ன? என்பதையே ஆழமாகச் சிந்திக்கக்கூடிய கேள்வியாகும்.

மலேசிய அம்பு விடுதல் கழகத்தின் முதண்மை பயிற்றுனரான திரு.புவனேஸ்வரன் அவர்களைக் கடந்த வாரங்களில் சந்தித்தப்போது அவரும் இப்படியொரு விமர்சனத்தையுடையவராகவே இருந்தார். நம் இந்திய மாணவர்களுக்கு இந்த விளையாட்டில் நல்ல எதிர்காலம் உண்டு எனவும் இதை அவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் நாம்தான் நமது ஈடுப்பாட்டையும் அக்கறையையும் காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மலேசியாவிலேயே அம்பு விடுதல் விளையாட்டிற்கான முதண்மை பயிற்றுனராக பல நாடுகளுக்குச் சென்று தன் திறமையையும் வழிக்காட்டுதலையும் வழங்கி வரும் திரு.புவனேஸ்வரன் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இந்த விளையாட்டை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். அவரின் மூலமே எனக்கு அம்பு விடுதல் விளையாட்டும் மலேசியாவைப் பிரதிநிதித்து பல நாடுகளில் தன் ஆளுமையை வெளிப்படுத்திய அன்பரசி சுப்ரமணியம்