Saturday, March 26, 2011

கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் இளஞ்செல்வன் இலக்கிய விருதளிப்பு விழாவில் ஆற்றிய உரை

அந்த விழாவில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதி:

நேற்று (25.03.2011) மாலை மணி 4 போல கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம் இரண்டு மலேசிய எழுத்தாளர்களுக்கு "எம்.ஏ இளஞ்செல்வன் விருது" விருது கொடுத்து கௌரவித்திருந்தது. எம்.ஏ இளஞ்செல்வன் மலேசிய நவீன இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளி எனத் தொடர்ந்து அடையாளப்படுத்தப்படுவதற்கு இந்த விருதளிப்பு ஒரு சான்றாகும் என இயக்கத் தலைவர் தெரிவித்திருந்தார்.