Saturday, March 19, 2011

பினாங்கு நகரின் மாலையில் – 2


தேவராஜனும் பச்சைபாலனும் அவர்கள் தங்கியிருந்த விடுதியின் முன்பக்க இருக்கைகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். பறை இதழுக்கு அதற்குள் பணம் வசூலித்துவிட்டு என்னிடம் 10 இதழ்கள் வேண்டும் கேட்ட தேவராஜனின் முகத்தில் ஆர்வம் தெரிந்தது. பச்சைபாலன் இதழை வாங்கிப் பார்த்துவிட்டு முகப்பில் கவிதைகள் இடத்தில் அவர் பெயரிருப்பதை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் தொடக்கத்தில் பறை இதழுக்குக் கவிதை அனுப்புவதாகச் சொல்லியிருந்ததால் முகப்பில் அவருடைய பெயரைப் போட்டிருந்தேன்.