Friday, December 30, 2011

இந்தியப் பயணம்-4 அம்மாயும் கல்லநேந்தல் கிராமமும்


தஞ்சாவூர் பேருந்து நிலையத்திற்கு நானும் விஷ்ணுபுரம் சரவணனும் வந்து சேர்ந்தோம். பேராசிரியர் வெற்றிச்செல்வனிடமிருந்து விடைப்பெற்று புதுக்கோட்டைக்குப் பயணப்பட்டேன். தங்சாவூரிலிருந்து மேலும் ஒரு 3 மணி நேரம் பயணம். தஞ்சை பெரிய கோவிலைத் தரிசித்த பிரமிப்புகள் மனதில் மீண்டும் மீண்டும் தோன்றின. புதுகோட்டை பேருந்து நிலையம் பரப்பரப்பாகவே காணப்பட்டது. பேருந்திலிருந்து இறங்கியதும் நீண்ட சாக்கடை. வரிசையாக ஐவர் நின்று சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர். சாக்கடை கருமையாகி ஓடிக்கொண்டிருந்தது.

Thursday, December 29, 2011

கவிதை: ஆண்களின் கழிப்பறை

மன்னிக்கவும்
உள்ளே நுழைவதற்கு 30 சென் செலுத்தியாக வேண்டும்
வசூலிக்க ஆள் இல்லாவிட்டாலும் சிதிலமடைந்துவிட்ட மேசையின் மீதுள்ள
பழைய தகற குவளையில் நீங்கள் போடும் சில்லறைகள்
பேரோசையாகக் கேட்க வேண்டும்.

Sunday, December 25, 2011

கலை இலக்கிய விழாவும் – நான்கு மலேசியப் படைப்பாளிகளின் நூல் வெளியீடும்


நண்பர்களின் கவனத்திற்கு,

வருகின்ற பிப்ரவரி மாதம் வல்லினம் பதிப்பகம்-இதழ் , கலை இலக்கிய விழாவை நடத்தவுள்ளது. தமிழக எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமான ஆதவன் தீட்சன்யா மற்றும் அ.மார்க்ஸ் அவர்களும் இவ்விழாவில் சிறப்புரை வழங்கவுள்ளனர். மேலும் மலேசிய இளம் எழுத்தாளர்களின் 4 நூல்களும் விழாவில் வெளியீடப்படும்.

1. கே.பாலமுருகன்-‘தீர்ந்து போகாத வெண்கட்டிகள்’- குழந்தைகள் சினிமாவைப் பற்றிய பதிவுகள்
2. ம.நவீன் – ‘கடக்க முடியாத காலம்’ சமீபத்தில் நவீன் எழுதிய கட்டுரைகள்/பத்திகள் தொகுப்பு
3. சிவா பெரியண்ணன் -‘என்னை நாயென்று கூப்பிடுங்கள்’- கவிதைகள்
4. யோகி – ‘துடைக்கப்படாத இரத்தக் கறைகள்’- பெண்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் கட்டுரைகள்

Thursday, December 22, 2011

இந்தியப் பயணம்(3) – பாரதியார் தேசம்


(barathiyar house)
(நான் பயணத்தைத் வரிசைக்கிரகமாக-தொடராக எழுதவில்லை, ஆகையால் இது நான் இந்தியா சென்ற ஐந்தாவது நாள்) கழுகு மலைக்குச் சென்று வந்த மறுநாள், எட்டயப்புரம் போவதாகத் திட்டம். பாரதியார் பிறந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என ஏற்கனவே செல்மாவிடம் சொல்லியிருந்தேன். அதைப் பற்றி மறந்திருப்பினும் கோணங்கி அண்ணன் இத்தனை தூரம் வந்தாயிற்று, எட்டயப்புரம் அருகாமையில்தான் இருப்பதாகக் கூறி காலையிலேயே அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தார். காலையில் எழுந்ததும் கோணங்கி அண்ணன் வீட்டில் மேல்மாடியிலிருந்து கோவில்பட்டி இரயில் தண்டவாளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் வீட்டு மொட்டைமாடி விசித்திரமாக இருந்தது. தாராளமான இடம். அவர் குடியிருப்பிலேயே நான்குக்கு மேற்பட்ட வீடுகள் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தன. கோணங்கி இருந்த வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி அவருடைய அப்பா தனி அறையில் வசித்துக்கொண்டிருந்தார். முதல் நாள் இரவே அவரையும் சென்று சந்தித்திருந்தோம். அவரும் ஒரு வரலாற்று நாவலாசிரியர்.

Tuesday, December 20, 2011

சிறுகதை: குளியல்

 1
துண்டை இழுத்துக் கட்டும்போது அது தொடைவரை இறங்கி கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறது. என்னுடைய குளியல் நேரம் சரியாக 6 மணிக்குத் தொடங்கும். முன்கதவை அடைத்துவிட்டு அறைக்கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு முதலில் ஆடையைக் களைவேன். சிறிது நேரம் நிர்வாணமாக இருப்பதற்கு ஒரே ஒரு வாய்ப்பு குளியலுக்கு முன்பும் குளியலின் போதும் உருவாகும் இந்தக் கணம் மட்டுமே. 5 நிமிடம் வந்து போகும் என்னுடைய நிர்வாணம் ஒட்டு மொத்த உலகையே கேலி செய்வது போல இருக்கும்.

நான்சுவர் இல்லாமல், கதவு இல்லாமல், மறைப்பேதும் இல்லாமல், ஒரு சவர்க்காரம், தண்ணீரை அள்ள ஒரு கை வாலி, இது மட்டும், பிறகு ஒரு

Saturday, December 17, 2011

தீர்ந்துபோகாத வெண்கட்டிகள் - சினிமா புத்தகம்

இவ்வருடம் வல்லினம் பதிப்பில் வரும் மூன்றாவது புத்தகம், கே.பாலமுருகனின் 'தீர்ந்து போகாத வெண்கட்டிகள்'. மலேசியாவில் முதன் முதலாக உலக திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. வல்லினம் இணைய இதழில் இந்த வருடம் கே.பாலமுருகன் எழுதி 10 தொடர்களாக வந்த கட்டுரைகளைத்தான் இதில் தொகுத்துள்ளோம்.                   - வல்லினம்
சினிமா என்பது கலை என மீண்டும் மீண்டும் நிருபிக்க வேண்டியிருக்கிறது. அசலான படைப்புக்கும் உலக சினிமாக்களைக் காப்பியடித்து மறுபிரதியெடுக்கும் கற்பழித்தல் முயற்சிக்கும் மத்தியில் எது உண்மையான படைப்பு எது சினிமா என அரைகுறை அறிவுக்கூட இல்லாதவர்களிடம் தொடர்ந்து சினிமா சார்ந்து உரையாட வேண்டியிருக்கிறது. சினிமா என்ற கலையைக் காலம்தோறும் மழுங்கடிக்கும் ஒரே விசயம் 'வெகுசன இரசனைத்தான்'. இன்னும் நூற்றாண்டு பல கடந்தாலும் சினிமா என்பதை அக்குளில் கிச்சுகிச்சு மூட்டி மகிழ்ச்சிப்படுத்தும் ஒன்றாக மட்டுமே புரிந்துகொள்ளப்படும் அவலம் இங்கிருக்கிறது. (மாற்று இரசனைக்குத் தயாராக வேண்டும்) 
- கே.பாலமுருகன்

Wednesday, December 14, 2011

இந்தியப் பயணம் – பரப்பரப்பும் அமைதியும் (2)


3 மணிநேரம் 30 நிமிடத்திற்குப் பிறகு சென்னை விமான நிலையம் வந்திறங்கியப் போது பயணக் களைப்பை உணர முடியவில்லை. உடலுக்கு ஒரு தயாரிப்பு நிலை இருக்கிறது. நம்முடைய உடல் மீதான பலவகை கற்பிதங்களையும் கடந்து உடல் தன்னை உற்பத்தி செய்து கொள்கிறது. சென்னை விமான நிலையத்தில் பரிசோதனைகளும் பாதுகாப்பும் கொஞ்சம் கெடுபிடியாகவே இருந்தது. நான் அங்கு வந்து இறங்கியத் தினம் கனிமொழி விடுதலையாகி அநேகமாக இங்கு வரக்கூடும் என ஷோபா சக்தி சொல்லியிருந்தார். அந்தப் பரப்பரப்பை அதனுடன் தொடர்புப்படுத்திப் புரிந்துகொண்டேன். ஆனால் கடைசி வரை கனிமொழியைப் பார்க்க முடியவில்லை.

Monday, December 12, 2011

இந்தியப் பயணம் – அறிமுகங்கள் (1)



இலக்கியப் பயணம் எனச் சொல்லிவிட்டுச் சென்றதெல்லாம் ஒரு பாவனைத்தான். இங்கிருந்துதான் ஆண்டுதோறும் பல ‘எழுத்தாளர்கள்’ இலக்கியப் பயணம் செல்கிறார்களே. அவர்கள் போதாதா மலேசிய இலக்கியத்தைக் கடல் கடந்து சென்று வளர்க்க? கவிஞர் செல்மா அவர்களுடன் பேசித் தீர்மானிக்கப்பட்ட பயணம் இது. அங்குள்ள எழுத்தாளர் நண்பர்களுடன் ஒரு நட்பை ஏற்படுத்திக்கொள்வதே முதண்மையான நோக்கமாக இருந்தது. அதன்படி சென்ற முதல்நாள் முதல் இறுதிநாள் வரை பல சமயங்களில் கவிஞர் செல்மா பிரியதர்ஷனும் யவனிகாவும் உடன் இருந்து என்னுடன் பயணித்தார்கள்.