Sunday, November 27, 2011

இந்தியா பயணம்


இந்தியாவிற்குப் பயணப்படுகிறேன். நாளை மறுநாள் காலையில் இந்தியாவில் இருப்பேன். மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை மேலும் சில ஊர்களில் இலக்கிய நண்பர்களையும், தமிழ்த்திரைப்பட இயக்குனர்களையும் சந்தித்து உரையாடும் நோக்கத்தோடு பயணிக்கிறேன். இந்தப் பயணம் அர்த்தமுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை உண்டு. முடிந்தவரை மலேசிய இளம் படைப்பாளர்கள் இங்குச் செய்துகொண்டிருக்கும் மாற்று முயற்சிகளை அறிமுகப்படுத்தி அங்குள்ள இளம் படைப்பாளர்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு தமிழ் இலக்கியச் சூழலில் செயல்படும் வகையாக என் பயணம் அமையும் என நினைக்கிறேன். 12 நாட்களுக்குப் பிறகு மலேசிய திரும்பியதும் ஒரு வாரம் சிங்கப்பூர் பயணம். அதுவும் இலக்கியம் தொடர்பானதாக அமைகிறது. 

திரைப்படம்: மயக்கம் என்ன? குரூரமான சினிமா பார்வையாளர்கள்


செல்வராகவனின் படம் என்பதால் அதில் வழக்கமாக இருக்கப் போவது மனச்சிதைவு தொடர்பான அதீதமான பதிவுகள். ஒரு தமிழனுக்கு மனச்சிதைவு வந்தால் அவனை அது அதீதமான மன எழுச்சிக்கு உட்படுத்தும் என்பதைப் போல தன் படத்தின் வழி மனக்கோளாறுகளின் பல எல்லைகளைத் தொட முயன்றவர். ஆனால் அது எந்த அளவிற்கு உண்மையைத் தழுவி நின்றது என்பது விமர்சனத்திற்குரியது. ஆனால் செல்வராகவனின் படங்களில் வெறும் காதலால் மட்டும் மனச்சிதைவின் சாத்தியங்களை உருவாக்கிக்காட்டுவது தொடரக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது. மயக்கம் என்ன அதற்கு மாறான ஒன்றைக் காட்டிச் செல்கிறது.

Thursday, November 24, 2011

My short film: Go Back

My recent short film: just a trial for memorial of harvard 3 tamil school.

starring: henrey, Nalini, my some students, and Siti.
story, direction, cinematography: K.Balamurugan

http://www.youtube.com/watch?v=tjQ5pqYjkGo

Saturday, November 19, 2011

கோ. புண்ணியவானின் 'எதிர்வினைகள்' நூல் விமர்சனம்: “சாமிக்கண்ணு ஏன் தற்கொலை செய்து கொண்டான்?”

 சமீபத்தில் கோ.புண்ணியவான் தன்னுடைய மூன்றாவது சிறுகதை தொகுப்பைப் பிரசுரித்திருந்தார். அதன் புத்தக வெளியீடு சுங்கைப்பட்டாணியில் 'கார்னிவல்' எனும் மண்டபத்தில் நடந்தேறியது. மலேசிய தமிழ் இலக்கிய சூழலில் வெகுகாலம் எழுதிக் கொண்டிருப்பவர் கோ.புண்ணியவான். 2005 ஆம் ஆண்டில் கல்லூரியில் பயிலும்போது அவருடைய சிறை நூலின் வழி கதைகளைப் படித்திருக்கிறேன். மேலும் 2008ஆம் ஆண்டு தொடங்கி அவருடைய சிறுகதை வளர்ச்சியையும் கவனித்து வருகிறேன். 2009ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய இதழான 'உயிர் எழுத்து' இதழில் அவர் சிறுகதை எழுதத் துவங்கிய பிறகு பெரும் மாற்றங்களை அடையாளம் காண முடிந்தன. மேலும் பேரவை கதை போட்டியில் மட்டுமே 12 முறைக்கு மேல் தன் சிறுகதை திறனைத் தொடர்ந்து பரிசோதித்து வெற்றியும் பெற்று வரும் ஒரே எழுத்தாளர். 

‘எதிர்வினைகள்’ எனும் அவருடைய சமீபத்திய சிறுகதை தொகுப்பில் மொத்தம் 17 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

Tuesday, November 8, 2011

கவிதை: ஒரு சொல்லைக் கொன்றவுடன் அடக்கம் செய்யவும்

ஒரு சொல் ஊனமானதுடன்
தன் மீதான அனைத்து குரல்களையும் கொன்றுவிடுகிறது.
ஒரு சொல்லை எப்படி ஊனமாக்கலாம்?
பெரும் வாக்கியத்துக்குள் அர்த்தமற்று நுழைக்கலாம்
தனி வாக்கியத்தில் பிழையான பொருளுடன் உள்நுழைக்கலாம்
குறிலை நெடிலாக்கி நெடிலைக் குறிலாக்கி துணைக்காலைப் பிடுங்கியெடுத்து
சொல்லுக்குள்ளிருக்கும் எழுத்தை எப்படிவேண்டுமென்றாலும் மாற்றிச் சிதைக்கலாம்.
ஊனமான ஒரு சொல்லைப் பிறகெப்படிக் கொல்வது?

Monday, November 7, 2011

கவிதை: வீட்டில் இருப்பதைப் பற்றி

நான் எங்கேயும்  போவதற்கில்லை
ஆகையால் வீட்டில்தான் இருக்கிறேன்.
ஒவ்வொரு இரவுகளையும்
மௌனமாகக்  கவனித்தபடி இருக்கும்
நான் வழக்கமாக
வீட்டில்தான்  இருக்கிறேன்.
உறங்கி எழும்போது
நான் வீட்டில் இருப்பதை
மறப்பதில்லை.
எல்லாப் பொழுதுகளையும்
பாதுகாப்புடன் கடக்க
எனக்குத்  தேவை
நான் வீட்டில் இருப்பது.