Friday, October 28, 2011

ஆஸ்திரேலிய சினிமா: திருடப்பட்டத் தலைமுறை (Rabbit Proof Fence

1500 மைல்
நிலத்தை எரிக்கும் வெயிலை மிதித்தப்படி
ஊர் தேடி அலையும் பறவைகள் போல
வேலிகளைக் கடக்க முடியாத ஒரு பயணம்”

பிலிப் னோய்ஸ் 2002 ஆம் ஆண்டு இப்படத்தை இயக்கி வரலாற்றில் ஒளிந்திருந்த சில உண்மைகளை உலகிற்குக் கொடுத்தார். சமீபத்தில் பினாங்கு மாநிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் போர் அருங்காட்சியகத்துக்குச் சென்றபோது, எப்படிப் பிரிட்டிஷாரால் மலாயாவைப் பிரிக்கும் எல்லையாகப் பயன்படுத்தப்பட்ட இடம், ஜப்பானிய காலக்கட்டத்தில் சிறையாகவும் வதை செய்யும் இடமாகவும் மாற்றப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அங்கிருக்கும் சுவர்களில் துப்பாக்கி குண்டுகளும் மரணித்தவர்களின் கதறல்களும் குருதி காய்ந்த வாடையும் எப்பொழுதும் பதிந்து கிடப்பது போன்ற சூழலை அதன் மௌனத்தை வைத்து உணர முடிந்தது. ஒவ்வொரு பிரதேசமும் இப்படியொரு வரலாற்றின் மரண ஓலத்தை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது. ஏதோ ஒரு பாசிச அரசு தனது

Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு – முதல் பார்வை


படம் வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருப்பதால் படத்தை முழுக்க விமர்சித்து பார்வையாளனுக்குக் கிடைக்கவிருந்த அனுபவத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. ஆகையால் இதை ஒரு சினிமா பார்வையாக மட்டும் மேலோட்டமாக எழுதலாம் என முடிவெடுத்துள்ளேன். காலத்தின் தேவைக்கருதி செயல்படுவதன் மூலம் சில சமயங்களில் சொற்பமாகப் பேசிச் செல்வதே நடைமுறைக்கு ஏற்புடையது.

‘வாகைச் சூட வா’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு சமர்ப்பண வகை சினிமாவைப் பார்த்தேன். ஆகையால் இனி ‘சமர்ப்பண’ வகை சினிமாக்கள்

Saturday, October 22, 2011

குறுநாவல் தொடர்:தனிமையின் ஆயிரம் குரல்கள்


மிக விரைவில் குறுநாவல் தொடர் எழுதவிருக்கிறேன். வெகுநாட்களுக்குப் பிறகு இதை எழுத வேண்டும் எனத் தோன்றியிருக்கிறது. என் வலைப்பூவிலும் முகநூலிலும் இடம்பெறும். “தனிமையின் ஆயிரம் குரல்கள்”. ஒரு நகரத்தின் சிதைக்கப்பட்ட மனங்களின் எல்லையற்ற ஒழுங்கற்ற பதிவுகளும்.. மர்மங்களும் தற்கொலைகளும் நிரம்பிய கதைக்களம். குறிப்பு: வழக்கம் போல இது மாணவர்களோ அல்லது சிறுவர்களோ படிக்க வேண்டிய கதை அல்ல. உயிரோடு அல்லது மரணித்த யாரையும் குறிப்பிடும் நோக்கமும் இல்லை. 

கே.பாலமுருகன்

Sunday, October 9, 2011

தனி – சிங்கப்பூர் இலக்கிய சிற்றிதழ்



நண்பர் பாண்டித்துரை, பூங்குன்றன் பாண்டியன், அப்துல்காதர் ஷாநவாஸ் அவர்களின் முயற்சியில் இவ்வருடம் அக்டோபர் முதல் தனி இலக்கிய இதழ் வெளிவரத்துவங்கியுள்ளது. கடந்த வருடங்களில் வெளிவந்துகொண்டிருந்த ‘நாம்’ சிங்கப்பூர் இலக்கிய சிற்றிதழ்தான் இப்பொழுது மாற்று அடையாளங்களுடன் மேலும் பல மாற்றங்களுடன் வெளிவருகின்றது. அய்யப்பன் மாதவன், மாதங்கி, எம்.கே குமார், இராம கண்ணபிரான், ஷாநவாஸ் எனப் பலர் எழுதியிருக்கின்றனர்.

சிங்கப்பூர் மலேசிய இலக்கியத் தொடர்பிற்கு பல சமயங்களில்  களமாக இருந்து வருவது இது போன்ற சிற்றுதழ் முயற்சிகள்தான். கடந்த வருடம் சிங்கப்பூர் வாசகர் வட்டம் மலேசிய அநங்கம் சிற்றிதழை அங்கு அறிமுகப்படுத்த களம் அமைத்துக் கொடுத்தது வரை அந்த உறவு எப்பொழுதும் தொடர்கிறது. அதற்கும் முன்பு காதல் இதழ் ஒருமுறை அங்கு அறிமுகம் கண்டுள்ளது என்பதையும் நினைவுக்கூர்கிறேன். தனி இதழில் தொடர்ச்சியான மலேசிய இலக்கியவாதிகளின் பங்களிப்பு அவசியமானது. படைப்புகளை அனுப்ப விரும்புவோர் இந்த மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்:

கவிஞர் பாண்டித்துரை : thanimagazine@gmail.com

Thursday, October 6, 2011

திரை விமர்சனம்: வாகை சூட வா (கண்டெடுத்தான் காடும் கண்டெடுக்க முடியாத கலையுணர்வும்)


கண்டெடுத்தான் காடு எனும் ஒரு குக்கிராமத்தின் கதை இது. ஒரு பூர்வகுடி சாயலில் வாழும் மக்கள். செங்கல் அறுத்து அதை ஒரு சிறு முதலாளியிடம் விற்று வாழ்க்கையைக் கடத்துகிறார்கள். செங்கல் சூரையில் பெரியவர்கள் முதல் பிள்ளைகள்வரை வெயிலில் காய்ந்தவாறு வேலை செய்கிறார்கள். அவர்கள் கடைசிவரை நம்பி வாழ்வதே அந்த மண்ணையும் மண் கொடுக்கும் செங்கலையும்தான். படம் 1966 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. புழுதி பறக்கும் கிராமத்தின் மூலையில் இலையுதிர்ந்து நிற்கிறது ஒரு மரம். அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்கிற இலட்சியத்துடன் வாழும் விமல், ஒரு தனியார் அமைப்பின் மூலம் கண்டெடுத்தான் காட்டிற்கு வாத்தியாராக வந்து சேர்கிறார்.

Tuesday, October 4, 2011

இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம்: றியாஸ் குரானாவின் கவிதைகள்

“நான் கவிதை சொல்லி, கவிஞனில்லை”- றியாஸ் குரானா
ஒரு கவிதையைக் கொல்ல முடியுமா? அல்லது கவிதை என நாம் நம்பிக்கொண்டிருக்கும் ஒரு வெளியை வேரறுத்து புதிய கதைப்பரப்பை அதற்குள் நுழைக்க முடியுமா எனக் கேட்டால், அந்தக் கேள்வி சமக்காலத்துக் கவிதையைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முறைமையாக இருக்கும் என நினைக்கிறேன். மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலைத் தேட முயன்ற நான் அதை றியாஸ் கவிதைகளுக்குள் கண்டடைந்திருப்பதாக ஒரு குற்றசாட்டை முன்வைக்கிறேன். கவிதைக்கு ஒரு கூட்டுப் புரிதலை நோக்கிய ஒரு களம் அவசியம் தேவைப்படும் எனச் சொல்வதற்கில்லை. ஒரு கவிதை இன்று பல்வேறு சமயங்களில் பலவகைகளில் புரிந்துகொள்ளப்படுகின்றது. மனதின் அந்தரங்கமான மொழித்தான் கவிதை எனச் சொல்லப்படுகிறது. அந்தரங்கமான ஒன்று ஒரு மனிதனின் ஆழ்மனதுடன் பேசும் உரையாடலை எப்படிப் பொதுவிற்குக் கொண்டு வந்து கலந்தாலோசிப்பது? அல்லது விவரமாகக் கருத்துரைப்பது? இதுவே இக்காலக்கட்டத்தின் கவிதையை நோக்கி நாம் முன்வைக்கும் சவாலாகக்கூட இருக்கலாம்.

Sunday, October 2, 2011

சிறுகதை: ஒரு மேசை உரையாடல்







“வா மணி!”

“கேங் சண்டன்னா சொல்லு... எறங்கிருவோம்... இப்படிப் பேச்சுக்குக் கூப்டறது எனக்குச் சரியா படல...”

“ரிலேக் பண்ணு மணி... முனியாண்டி கேங்ல சேர்ந்தோனே துள்ளற பாரு... முன்ன எங்க இருந்த நீ? கொஞ்சம் தெரிஞ்சி பேசு...”

“பாங்... இந்தப் பழைய கதைலாம் பேசத்தான் கூப்டிங்களா?

“இரு மணி. ஒரு கருப்பு பீரு சொல்லட்டா? டென்ஷன் ஆகாத... சண்டைக்கு வரச் சொல்லல... ஆப்பே ஹீத்தாம் சத்து”

“நான் முனியாண்டி, தியாகு... இப்படி யார் கேங்லயும் இருப்பன். என் மனசுக்கு யாருகிட்ட இருக்கணும்னு சொல்லும்...”

“ஆமாம் மணி. நீ யாரு... செம்ம ஜாமான்காரன்...”

“இப்ப என்னா குத்திக் காட்டறீங்களா? இந்தக் கஞ்சா தொழிலுக்கு யாரு என்னை இழுத்துக்கிட்டு வந்தது?”

“சரிடா... மணி. நாந்தான். ஆனா, கத்துக்கொடுத்த குருவுக்கே நீ செய்யற பாரு...”

“தொழில்னா எங்க பூர முடியுமா அங்க பூந்துகிட்டுப் போக வேண்டியதுதான்... இதுல குரு கிருலாம் இல்ல...”

“ஓ... அப்படியா மணி? ஜாலான் காசுலாம் வாங்கறீயா?”

“தோ பாருங்க பாங். இப்ப நான் உங்க கேங்ல இல்ல. சும்மா என்ன ஏன் கேள்விக் கேக்குறீங்க? நான் எங்க காசு வாங்கனா என்ன?”

“எல்லா மறந்துட்டியா மணி? உன் தங்கச்சி சரசு எப்படி இருக்கு? இன்னும் ஜாமான் விக்குதா?”

“பாங்... அது என் இஷ்டம். என் தங்கச்சி. எங்க எப்படி வைக்கணும்னு எனக்குத் தெரியும். நீங்க நாட்டாம செஞ்சிக்கிட்டு இருக்காதீங்க...”

“மணி. ரொம்ப தப்பு பண்ற... நம்ம கேங்ல ஒரு சட்டம் இருக்கு. பொம்பளைங்கள உள்ள இழுக்கக்கூடாது. அவுங்கள தொந்தரவு செய்யக்கூடாது... தெரியும்ல?”

“பாங்... நான் உங்க கேங் இல்ல. எதுக்கு உங்க சட்டத்த நான் மதிக்கணும். வெளாட்டுக் காட்டிக்கிட்டு இருக்காதீங்க... எல்லா கஞ்சா கைகங்கத்தான்... அப்புறம் என்ன சட்டம் திட்டம்?”

“மணி... நல்லா பேசறடா. ஜாலான் காசு, பொம்பள அது சரி நான் உன்ன ஏன் கூப்டன்னா... நம்ம பையன் ஒருத்தன் பாப்ல ஜாமான் தள்ளிக்கிட்டு இருக்கும்போது கை வச்சிட்டியாம்... நீ அப்படி ஏதும் செய்யலைன்னா சொல்லிட்டுப் போய்க்கிட்டே இரு...”

“ஆமாம்... கை வச்சன். அவன் என்னா என்ன பாத்து துரோகின்னு சொல்றான். நான் உன்கிட்ட சொல்லிட்டுத்தானே வெளியானன். எங்க லாபம் அதிகம் இருக்கோ அங்க போறதுதானே சரி? அப்புறம் அவனுக்குப் பேச்சு ஓடுது?”

மணி... அவன் உன்ன விட பல வருசம் கேங்ல நேர்மையா இருக்கறவன். அவனுக்குக் கெட்கற உரிமை இருக்கு... நீ அவனை அங்க வச்சி அடிச்சது தப்பு மணி... அது பிசனஸ் பண்ற இடம்...”

“என்னா பாங் பிசினஸ்? ஏதோ அரிசி வியாபாரம் பண்ற மாதிரி பில்டாப்பு கொடுக்குறீங்க... கட்டி விக்கற நாய்க்கு என்ன எத்திக்ஸ்’?”

இரண்டு துப்பாக்கி சூடுகள் அக்கடையில் வெடிக்கிறது. அதுவரை மாற்று உடையில் பக்கத்து மேசையில் அமர்ந்திருந்த ஓப்ஸ் பெர்சே குழுவின் தலைவர் மாரிமுத்து கடையிலிருந்து வெளியே வந்து மேலதிகாரிக்குத் தொடர்புக் கொண்டார்.

-      கே.பாலமுருகன்