Saturday, February 27, 2010

இசையின் விரல்கள் - பண்டிதர் ரவி சங்கர்

பாரத ரத்னா பண்டிதர் ரவி சங்கர் (Ravi Shankar) (பிறப்பு-ஏப்ரல் 7,1920), உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக்கலைஞர் ஆவார். இவருக்கு 1999ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.










கிழக்கு- மேற்கு நாடுகளில் இந்திய இசையின் மரபான ஆளுமையாகப் போற்றப்படுபவர் பண்டிதர் ரவி சங்கர்.

தனது  "Shankar Family & Friends" and "Festival of India" எனப்படும் ஆல்பங்களின் மூலம் தனது இசை மகத்துவத்தை உலகம் முழுவதும் அதீதமாகத் தெரியப்படுத்தினார்.

60களின் இடைக்காலக்கட்டத்தில் "Monterey Pop Festival, Concert for Bangla Desh, and The Woodstock Festival" எனப்படும் இசை நிகழ்வுகளின் மூலம் மறக்க முடியாத இளைஞர்களின் எழுச்சியை மையமாகக் கொண்டு தனது குரலை எழுப்பியவர்.

உலகலாவிய நிலையில் அவர் பெற்ற விருதுகள்:
the Bharat Ratna, the Padma Vibhushan, Desikottam,Padma Bhushan of 1967, the Music Council UNESCO award 1975, the Magsaysay Award from Manila, two Grammy's, the Fukuoka grand Prize from Japan, the Polar Music Prize of 1998, the Crystal award from Davos, with the title 'Global Ambassador' to name some.


"உணர்வுகளை தனிதனியான
உன்னதமாக அறுக்கும்
இசைக் கோர்வையென
எழும்பும்
அதிசயத்தின் வரிகள். . .

நதியின் சலசலப்பை
இசைக் கம்பிகளில்
வழியவிடும் நுட்பமும்
பறவைகள் போடும் தாளம் போலவும்
இயற்கைக்கும் உயிருக்கும் மத்தியிலான
சித்தாரின் துடிப்புகள். . .



உமது மீட்டுதல்
முடிவுறும் தருணங்களில்
சித்தார் கம்பிகளோடு
எமது இசை இரசனையும்
அடர்த்தியாகி எனக்குள்
நிரம்புகிறது. . .

இடைவிடாமல் உமது
இசை ஒலியில்
எத்துனை மனங்கள்
சேர்ந்து ஒலிக்கக்கூடும்?

 மாபெரும் ஒரு காவியத்தின்
மிக நீண்ட வரலாற்றின்
ஒலியை எழுப்பும்
உமது கரங்கள்
கடவுள் என்கிற வலிமையால்
புனையப்பட்டதாகவும்
இருக்கலாம். .

ஒரு வேண்டுதலையும்
வழிப்பாட்டையும்
சுமந்து தீர்கின்றன
மானுட நதியில். .

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா