Monday, February 8, 2010

சொல்வனம்- சிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் அடையாள அரசியல்- (எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் உரையாடல்)

17-12-09

இலக்கிய சூழலில் அதிகாரங்களையும் ஆக்கிரமிப்புகளையும் விவாதிக்க ஏற்ற களமாக உரையாடலே மிகச் சிறந்த வடிவம் என்கிற நம்பிக்கையில் சிங்கப்பூரில் வெறும் வாய்மொழி சாடல்களாகவும் விமர்சனமாகவும் நிலவி வந்த அடையாள அரசியலின் பரிசீலனையின் முதல் கட்டமாக, சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களுடன் எதார்த்தமாக நிகழ்த்தப்பட்ட உரையாடலின் சிறு பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதை இங்கேயே இப்படிவிட்டுவிடுவது, அல்லது எங்களின் உரையாடல் முடிவடைந்த புள்ளி தீர்வாகவோ பரிந்துரையாகவோ அடையாளப்படுத்த இயலாமல் தொடர்ந்து அடையாள அரசியலின் அடுத்தகட்ட உரையாடலாக முன்னகர்த்திக் கொண்டு செல்லலாம் என முடிவெடுத்துள்ளேன்.

படைப்பாளியின் புற அடையாளங்களை வரையறுத்து, அவற்றின் மூலம் அடையாள அரசியலை முன்னெடுக்கும் புதிய மதிப்பீடுகள், படைப்பாளர்களின் மீதான அதிகார கட்டமைப்பாகப் பிரயோகிக்கப்படுவது பலவீனமான இலக்கிய பார்வை என்பது என் கருத்து.

உரையாடல்

கே. பாலமுருகன்: தாங்கள் சிங்கப்பூருக்கு குடிப்பெயர்ந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டதாக அறிகிறேன். சிங்கப்பூர் இலக்கிய வரலாற்றைப் பற்றி இதுவரை எத்துணை விமர்சனங்கள் அல்லது கட்டுரை எழுதியுள்ளீர்கள்? சிங்கப்பூருக்கு குடி பெயர்ந்து வரும் தமிழக எழுத்தாளர்கள் சிங்கப்பூர் இலக்கியம் குறித்து அக்கறை காட்டுவதில்லை எனவும், மேலும் அதன் வரலாறையும் வளர்ச்சியும் பற்றிய அவாதானிப்புகளும் இல்லாமல் இருப்பதாகவும் நான் கருதுகிறேன்.

மேலும் படிக்க...»

சொல்வனம்
மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.
சொல்வனம் 05-02-2010 இதழ்‏