Sunday, October 11, 2009

இன்று கெடாவில் கவிதைக் கருத்தரங்கம்

       தாமதமான அறிவிப்பிற்கு வருந்துகிறேன். தேசிய அளவில் நடந்த கல்வி அமைச்சின் கலைத்திட்ட மேம்பாட்டு குழு லங்காவியில் நடத்திய பட்டறையில் கலந்து கொண்டதால், 5 நாட்களுக்கும் மேலாக பதிவைப் புதுப்பிக்க இயலவில்லை. புதுக்கவிதை மாற்றங்கள் குறித்தும் நவீன கவிதை அறிமுகமும் மூத்த இலக்கியவாதிகள் கலந்து சிறப்பிக்க இன்று நடைப்பெறுகிறது கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் கவிதைக் கருத்தரங்கம்.


முதல் அமர்வு
5.30-6.00 மாலை
புதுக்கவிதையும் மாற்றங்களும் – எழுத்தாளர் எம்.கே ஞானசேகரன்

இரண்டாம் அமர்வு
6.10-6.40 மாலை
நவீனக் கவிதைக் களம் ஓர் அறிமுகம் – எழுத்தாளர் கோ.புண்ணியவான்

மூன்றாம் அமர்வு
6.50-7.30 மாலை
அநங்கம் இதழ் கவிதைகள் ஓர் பார்வை(கலந்துரையாடல்) – மணிஜெகதீசன்

-தேநீர் விருந்து

கேள்வி பதில் அங்கத்துடன் அண்மைய கவிதை வளர்ச்சி/ கவிதைக்கான அடுத்த கட்டங்கள் குறித்து கலந்துரையாடி பயன்பெற கெடா மாநில எழுத்தாளர்கள், வாசகர்கள், பொது மக்களை அன்புடன் அழைக்கின்றோம். தவறாமல் வந்து கலந்து கொண்டு இலக்கிய நுகர்வைப் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

திகதி: 11.10.2009 (ஞாயிற்றுக்கிழமை)
இடம் : சுத்த சன்மார்க்க வள்ளலார் மன்றம் சுங்கைப்பட்டாணி
Vallalar mandram Taman Ria (Belakang Caltex Jln Cinta Sayang)
நேரம் : மாலை 5.20- 7.30வரை

-கே.பாலமுருகன்