Tuesday, July 14, 2009

எழுத்தாளர் சண்முகசிவாவுடன் ஒரு கோப்பைத் தேநீர் – 2

அநங்கம் இதழ் குழு சார்பில் இளைஞர்களுக்கான “ஒரு கோப்பைத் தேநீர் இரண்டாம் கலந்துரையாடல் சந்திப்பாக கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. எழுத்தாளர் சண்முகசிவா ஒரு தனித்துவமான நகைச்சுவை உணர்வு கொண்ட ஒரு எளிமையான மனிதர். சிறந்த எழுத்தாளரும்கூட. கலந்துரையாடலைப் பற்றி சொன்னதும், உடனே ஆதரவைத் தெரிவித்தவர், “ஒரு கோப்பைத் தேநீர்” எனக்கு பிடித்தமான பெயராக உள்ளது என்றார்.


ஒரு கோப்பைத் தேநீர் என்ற புத்தகத்தை ஓஷோ எழுதியுள்ளார். ஆங்கிலத்தின் (cup of tea) தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட பரவலான வாசிப்புக்குச் சென்ற முக்கியமான புத்தகம். இருத்தலியலின் மகத்துவத்தையும் நுட்பத்தையும் எளிமையான உரையாடலாக அந்தப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மனித உறவுகளுக்கு மத்தியில் இறுக்கமான சூழலையெல்லாம், உடைத்து எறியக்கூடியது இருத்தலியல் பண்பு. இப்பொழுது நீ இருக்கிறாய் என்பார் ஓஷோ.


ஆதலால், மூத்த எழுத்தாளர்களுடனான இந்தச் சந்திப்பும் கலந்துரையாடலும் பெரியவர் இளையவர் என்கிற வயது வித்தியாசங்களையும் சமூகப் பிம்பங்களையும் தகர்க்கும் ஒரு முயற்சியாக இருக்கட்டும் என்றுதான் “ஒரு கோப்பைத் தேநீரை” அவர்களுக்கு மத்தியில் வைத்துள்ளேன். நட்புணர்வுடன் இலக்கியம் பேசுவதில்தான் முறையான பகிர்தல் நடைபெறும். கொள்கை இறுக்கம், கருத்துமுரண்பாடு, அவதூறுகளுக்கு மத்தியில் நடைபெறும் உரையாடலும் பகிர்தலும் தலைகணத்தையும் ஆளுமை ஆக்கிரப்பையும்தான் வெளிப்படுத்தும்.



ஆகையால் நட்போடு ஒரு கோப்பைத் தேநீருடன் பேசலாம் வாங்க.
கலந்துரையாடல் சந்திப்பில் யாருக்கும் பொன்னாடையோ மாலையோ போர்த்தப்படாது. துதி பாடி பிரசங்கமும் நடத்தப்படாது, மிகவும் எளிமையான உரையாடல், சந்திப்பு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒஷோ தன் சீடனுடன் தேநீர் அருந்தி கொண்டே ஒரு கேள்வியைக் கேட்பார்.

“உலகத்திலேயே மிக அதிசயமான நிகழ்வு எது?”


)சீடன் பல உலக நிகழ்வுகளைக் கூறினான்.


“அதெல்லாம் எதுவும் இல்லை, இப்பொழுது நீயும் நானும் அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருப்பதுதான் உலகிலேயே அதிசயமான நிகழ்வு”

கலந்துரையாடலின் விவரங்கள்:

திகதி: 19.07.2009 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை மணி 9.00க்கு
இடம்: Petaling Jaya Perpustakaan Konumiti

மேல் விவரங்களுக்கு: கே.பாலமுருகன் (+6016-4806241)