Sunday, June 7, 2009

என்னா பாக்கறே?

இங்க என்னா பாக்கறே?
போய் வேலையே பாரு.
என்னா பொழுது போகலையா?
அப்படி வா வழிக்கு.

ரொம்ப சோர்வா இருந்தா
வா இலக்கியம் பேசலாம்.
அசோகமிதரனின் பாப்பானியசம் பேசலாமா
இல்லெ ஜெயகாந்தனோட சமஸ்கிருத
வசீகரத்தைப் பேசலாமா?
அதுவும் இல்லைனா ஷோபா சக்தியோட
புலி எதிர்ப்பு பத்தி பேசலாமா?
அல்லது கருணாநிதியின் மூக்கு
பத்தி பேசலாம்.
அப்பயும் சோர்வா இருக்கா?
அப்பனா சோனியாவோட
தேசிய கற்பைப் பத்தி அளக்கலாமா?

அப்பயும் முடியலையா
தக்காளி, இருக்கவே இருக்கே
பிரபாகரன் மரணம்.
லூட்டி அடிக்கலாம் வா
வெக்கங்கெட்டவனே.

ஈழப் போராட்டம் பத்தி
இப்பெ என்னா நொட்ட வந்துருக்கே?
என்னாது? தகுதியா?
போர்ப் பயிற்சி எடுத்துருக்கனுமா?
நல்லா வக்கணையா பேசறதுக்குத்தான்
பயிற்சி எடுத்துருக்கெ.
வா உன் மூஞ்சி மேல
காறி துப்ப.

கே.பாலமுருகன்