Thursday, June 4, 2009

மலாயாப்பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரவையின் ஏற்பாட்டில் தேசிய அளவிலான 24-ஆம் பேரவைக் கதையின் சிறுகதைப் போட்டி (2009/2010)

சிறுகதை எழுத்தாளர்கள் இந்தச் சிறுகதைப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்டு தமது அடையாளத்தை நிறுவலாம். ஆர்வமுள்ளோர் டைப் செய்யப்பட்டிருப்பின் 4-5 பக்கங்களுள்/ கையெழுத்தாக இருப்பின் 7-9 பக்கங்கள்- ஒரு சிறுகதையை எழுதி பேரவைக்கு அனுப்பி வைக்கலாம். எழுத்து அளவு 12, வரிசைகளுக்கான இடைவெளி 1.0 , பொதுப் பிரிவு மாணவர் பிரிவு என்று இரு பிரிவுகளாக நடத்தப்படுகின்றது. பொதுப்பிரிவில் 12 கதைகளும் மாணவர் பிரிவில் 10 கதைகளும் பரிசுக்குரிய கதைகளாக தேர்ந்தெடுக்கப்படும்.

மாணவர் பிரிவில் 16 வயது முதல் 25 வயது வரை பல்கலைக்கழகம்/ ஆசிரியர் கல்லூரி போன்ற படிப்பகத்தில் பயிலும் மாணர்வர்கள் பங்கெடுத்துக் கொள்ளலாம். பொதுப்பிரிவில் வயது வரம்பின்றி பங்கெடுக்கலாம்.


கதையின் கரு : கடந்த பேரவைப் போட்டி பரிசளிப்பின் போது அதன் நீதிபதியான விரிவுரையாளர் திரு.சபாவதி அவர்கள் தமது நீதிபதி உரையில் இப்படித்தான் கேட்டுக் கொண்டார். “மலேசிய பல்லின சமுதாயத்தை முன்னிறுத்தும் பானியிலான சிறுகதைகளை எழுதுங்கள், எல்லாம் இனத்தையும் கதைக்குள் கொண்டு வந்து மலேசிய கதையை உருவாக்குங்கள் என்று.”

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

ANTOLOGI CERPEN KE-24
PERSATUAN BAHASA TAMIL UNIVERSITI MALAYA
D/A JABATAN PENGAJIAN INDIA
FAKULTI SASTERA DAN SAINS SOSIAL
UNIVERSITI MALAYA
50603 KUALA LUMPUR

படைப்புகளை அனுப்ப வேண்டிய இறுதி நாள் : 31.08.2009